June 7, 2016
March 12, 2016
உறவில் விடும் விரிசல்கள்!
Posted by Murthy at 2:53 AM 0 comments
January 11, 2016
முகம் தெரியாமலே!
Posted by Murthy at 2:45 AM 0 comments
January 8, 2010
புன்னகைக்குப் பின்னால்...
புரியாமல் போனதடி
பெண்ணே...
உன்
புன்னகைக்குப் பின்னால்
என் எதிர்காலம்
என்னவாகுமென்று!
Posted by Murthy at 6:10 AM 1 comments
May 15, 2008
பிரியும் தருணம்!
உன்
பிரிவின் வலியைத் தாங்கும்
வலிமை எனக்கில்லை!
உன்னை
பிரியும்போது தான்
என்னையே இழக்கிறேன் - நான்!
நீ
என்னுடன் இருக்கும்
நேரம் மட்டும்
அப்படியே இருந்துவிடாதா?
என்னை
கடந்து செல்லும்
ஒவ்வொரு விநாடியும்
உன்னையே நினைக்க செய்கிறது.
என்
செல்போனைக் கூட
நொடிக்கொரு முறை
பார்க்கிறேன்,
உன்னிடமிருந்து
SMS வராதா என்று!
நேரங்களும் ஓடியது.
நாட்களும் சென்றது.
நீயும்
என்னை விட்டு
ஒரு நாள் சென்று விடுவாய்.
இனி
உன்னை பார்ப்பது எப்போது?
பழகிய நாட்கள் அனைத்தும்
பசுமையாகவே என் நெஞ்சத்தில்
நிறைந்திருக்கும்.
உன் நினைவுகளை
சுமந்து கொண்டு,
என்றாவதொருநாள் உன்னை
சந்திப்பேன் என்ற
நம்பிக்கையோடு
காத்திருப்பேன்!
Posted by Murthy at 10:45 PM 5 comments
July 16, 2007
ஹைக்கூ!
விபத்துகள் குறைந்தப்பாடில்லை;
ஆனாலும் எட்டு போடச்சொல்லும்
லைசென்ஸ் அதிகாரி!
Posted by Murthy at 6:15 AM 2 comments
எங்களை புதைக்காதீர்கள்!
எங்களை புதைக்காதீர்கள்!
இரவோ, பகலோ
இதயமற்ற
சில மனித மிருகங்கள்
எங்களை தோண்டியெடுத்து,
பாலியல் பலாத்காரம்
செய்யக்கூடும்.
தயவுசெய்து
எங்கள் பிணங்களுடன்
எங்கள் உணர்வுகளையும்
சேர்த்து எரித்து விடுங்கள்!
Posted by Murthy at 5:40 AM 1 comments
நாடோடி வாழ்க்கை!
நாகரீகம் வளர்ந்தும்
நாடோடி வாழ்க்கை
வாழ்கிறான் மனிதன்.
வாழ்வை உணராத வரையில்!
Posted by Murthy at 5:37 AM 0 comments