June 7, 2016

சந்தர்ப்பவாதிகள்!


ஒருவரை எதிர்க்க வேண்டுமென்றால், 
முழுவதுமாக எதிர்கொள்ளுங்கள்; 
விட்டு விலக வேண்டுமென்றால், 
முழுவதுமாக விலகி விடுங்கள். 
சமய சந்தர்பத்திற்காக 
ஒருவரை எதிர்க்க, மற்றொருவரை ஆதரிக்காதீர்கள்!

#சந்தர்ப்பவாதிகள்



March 12, 2016

உறவில் விடும் விரிசல்கள்!





என்னுடைய
எதிர்பார்ப்புகள் என்னவோ 
ரொம்ப சின்னதுதான்; அதை 
உன்னிடம்
எதிர்பார்த்தது தான் 
என் தவறு! 

நம் இருவருக்குமே 
எதிர்பார்ப்புகள் வெவ்வேறாக 
இருப்பதுதான் நம் 
பிரிவுக்கு காரணம்.

கோவம் கொள்வதால் 
காதல் இல்லை என்று 
அர்த்தம் ஆகிவிடுமா?

தங்களை புரிந்துகொள்ளவில்லை என்று 
சொல்லும் நீங்கள் தான் ஒருபோதும் 
எங்களை புரிந்துகொண்டதே இல்லை!

சில நேரங்களில் 
உங்கள் உதாசினங்கள் 
எங்களை காயப்படுத்திவிட்டு செல்லும் 
அந்த வலியை கூட 
உங்களிடம் சொன்னதில்லை;

தாயை மதிக்கும் நாங்கள் 
தாரத்தையும் அப்படியே மதிக்கிறோம் 
என்பதை கூட 
புரிந்து கொள்ளாமல் இருப்பவர்கள்.

பொறுப்புகளில் 
புதைந்து கொண்டிருக்கும் எங்களுக்கு, 
தேவையெல்லாம் உங்களிடமிருந்து வரும் 
கனிவான மொழிகள் மட்டுமே.

நீ
விட்டு கொடுப்பதாகவும் இல்லை;
உன்னை 
விட்டு விடுவதாக 
நானும் இல்லை!

January 11, 2016

முகம் தெரியாமலே!


உன் எண்ணமும், என் எண்ணமும் 
ஒன்றாய் போனதால் என்னவோ
உன்னை நான் நேசிக்கிறேன்
முகம் தெரியாமலே!

என் உணர்வுகளை புரிந்தும் 
என்னை தவிக்க வைப்பதேன்!

 என் மன உணர்வுகளை 
இந்த கவிதையும்
உனக்கு  பிரதிபலிக்கும்!

January 8, 2010

புன்னகைக்குப் பின்னால்...

புரியாமல் போனதடி
பெண்ணே...
உன்
புன்னகைக்குப் பின்னால்
என் எதிர்காலம்
என்னவாகுமென்று!

May 15, 2008

பிரியும் தருணம்!

உன்
பிரிவின் வலியைத் தாங்கும்
வலிமை எனக்கில்லை!

உன்னை
பிரியும்போது தான்
என்னையே இழக்கிறேன் - நான்!

நீ
என்னுடன் இருக்கும்
நேரம் மட்டும்
அப்படியே இருந்துவிடாதா?
என்னை
கடந்து செல்லும்
ஒவ்வொரு விநாடியும்
உன்னையே நினைக்க செய்கிறது.

என்
செல்போனைக் கூட
நொடிக்கொரு முறை
பார்க்கிறேன்,
உன்னிடமிருந்து
SMS வராதா என்று!

நேரங்களும் ஓடியது.
நாட்களும் சென்றது.
நீயும்
என்னை விட்டு
ஒரு நாள் சென்று விடுவாய்.
இனி
உன்னை பார்ப்பது எப்போது?

பழகிய நாட்கள் அனைத்தும்
பசுமையாகவே என் நெஞ்சத்தில்
நிறைந்திருக்கும்.

உன் நினைவுகளை
சுமந்து கொண்டு,
என்றாவதொருநாள் உன்னை
சந்திப்பேன் என்ற
நம்பிக்கையோடு
காத்திருப்பேன்!

July 16, 2007

ஹைக்கூ!

இரவலாக பெற்றாலும்
இரவுக்கு துணையாய்
வெண்ணிலா!

ஹைக்கூ!

விபத்துகள் குறைந்தப்பாடில்லை;
ஆனாலும் எட்டு போடச்சொல்லும்
லைசென்ஸ் அதிகாரி!

ஹைக்கூ!

உறங்கிய பின்னும்
உறங்குவதில்லை.
என் உணர்வுகள்!

எங்களை புதைக்காதீர்கள்!

எங்களை புதைக்காதீர்கள்!
இரவோ, பகலோ
இதயமற்ற
சில மனித மிருகங்கள்
எங்களை தோண்டியெடுத்து,
பாலியல் பலாத்காரம்
செய்யக்கூடும்.
தயவுசெய்து
எங்கள் பிணங்களுடன்
எங்கள் உணர்வுகளையும்
சேர்த்து எரித்து விடுங்கள்!

நாடோடி வாழ்க்கை!

நாகரீகம் வளர்ந்தும்
நாடோடி வாழ்க்கை
வாழ்கிறான் மனிதன்.
வாழ்வை உணராத வரையில்!