ஹைக்கூ!
இரவலாக பெற்றாலும்
இரவுக்கு துணையாய்
வெண்ணிலா!
விபத்துகள் குறைந்தப்பாடில்லை;
ஆனாலும் எட்டு போடச்சொல்லும்
லைசென்ஸ் அதிகாரி!
Posted by
Murthy
at
6:15 AM
2
comments
எங்களை புதைக்காதீர்கள்!
இரவோ, பகலோ
இதயமற்ற
சில மனித மிருகங்கள்
எங்களை தோண்டியெடுத்து,
பாலியல் பலாத்காரம்
செய்யக்கூடும்.
தயவுசெய்து
எங்கள் பிணங்களுடன்
எங்கள் உணர்வுகளையும்
சேர்த்து எரித்து விடுங்கள்!
Posted by
Murthy
at
5:40 AM
1 comments
நாகரீகம் வளர்ந்தும்
நாடோடி வாழ்க்கை
வாழ்கிறான் மனிதன்.
வாழ்வை உணராத வரையில்!
Posted by
Murthy
at
5:37 AM
0
comments
"படைத்தவனே பகையாளி"
ரிக்ஷாவில் கண்ட வாசகம்.
அதற்கு மேல் வரியில்
"கோட்டூர் குருசாமியே துணை".
Posted by
Murthy
at
5:32 AM
0
comments
ஆசிரமவாதிகளுக்கு
குறைவில்லை; ஏமாந்த
இந்திய மக்கள்
இருக்கும் வரை!
Posted by
Murthy
at
5:27 AM
0
comments
மொழி தெரிந்தும்
மொழிப்பெயர்க்க முடியவில்லை
என் உணர்வுகளை!
உன்னை மட்டும்
நெஞ்சில் சுமக்கின்றேன்
ஒரு சுமைதாங்கிப் போல!
அன்பு வைத்ததென்னவோ
அறவழியில் தான்.
இருந்தும் தெரியவில்லை − அது
அறவழி வன்முறை என்று!
என்
உணர்வுகளின் உச்சரிப்பு
நீ உணரும் வரையில்
உணரப்படாதது!
என்
உணர்வுகள் ஊமையில்லை.
ஊமையானது
என் உள்ளம் தான்!
Posted by
Murthy
at
5:22 AM
3
comments
காத்திருந்த காலமெல்லாம்
எனக்காக நான் சேர்த்திருந்தால்
என் பாலைவனமும்
சோலைவனம் ஆகியிருக்கும்
பாழாய்போனது
என் காதல் மனம்!
Posted by
Murthy
at
5:16 AM
0
comments