பிரியும் தருணம்!
உன்
பிரிவின் வலியைத் தாங்கும்
வலிமை எனக்கில்லை!
உன்னை
பிரியும்போது தான்
என்னையே இழக்கிறேன் - நான்!
நீ
என்னுடன் இருக்கும்
நேரம் மட்டும்
அப்படியே இருந்துவிடாதா?
என்னை
கடந்து செல்லும்
ஒவ்வொரு விநாடியும்
உன்னையே நினைக்க செய்கிறது.
என்
செல்போனைக் கூட
நொடிக்கொரு முறை
பார்க்கிறேன்,
உன்னிடமிருந்து
SMS வராதா என்று!
நேரங்களும் ஓடியது.
நாட்களும் சென்றது.
நீயும்
என்னை விட்டு
ஒரு நாள் சென்று விடுவாய்.
இனி
உன்னை பார்ப்பது எப்போது?
பழகிய நாட்கள் அனைத்தும்
பசுமையாகவே என் நெஞ்சத்தில்
நிறைந்திருக்கும்.
உன் நினைவுகளை
சுமந்து கொண்டு,
என்றாவதொருநாள் உன்னை
சந்திப்பேன் என்ற
நம்பிக்கையோடு
காத்திருப்பேன்!
5 comments:
very nice
Thanks Raja.
Nice Kavithai endrum unnaval un ninaivudan un arugil irupal
Privin Valiyai Unarthum Unnathamana Kavithai.
Thanks to Give Us.
By,
Sho..
Thank you shobana
Post a Comment