April 13, 2007

உறங்காத விழிகள்

மழைக்கும் கூட மனமில்லை!

ஆழ்ந்து உறங்கிய சிறுவனையும்

விட்டுவைக்கவில்லை.

தட்டி எழுப்பி, ஓரிடத்தில்

உருட்டினாள் தாய்.

உறக்கம் கலைந்த நிலையில்

சோர்ந்த இரண்டு விழிகளும்

விழித்துக் கொண்டிருந்த வானத்தையே

பார்த்திருந்தன விடியும்வரை!

விழித்திருந்தது அவனது விழிகள் மட்டுமல்ல,

இரவில் உறக்கத்தை மறந்த

அத்தனை நடைப்பாதை மக்களும்தான்!




No comments: