நினைவலைகள் ஓய்வதில்லை!
அழியாத
நினைவுகள்
என்றுமே அழிவதில்லை!
விழியால்
கண்ட காட்சிகள்
என்றுமே நிலைப்பதில்லை!
கழியாத
நாட்களென
என்றுமே ஒன்றுமில்லை!
ஆழியால்
பெற்ற முத்துக்கள்
என்றுமே தரம் குறைவதில்லை!
மழையால்
பெற்ற வளங்கள் அனைத்தும்
புவிக்கு சொந்தமில்லை!
சோழியால்
சொன்ன வார்த்தைகள்
எல்லாம் பழித்ததில்லை!
நாழிகையால்
கண்ட உண்மைகள்
அனைத்தும் விளங்குவதில்லை!
நட்பின்பால்
பெற்ற அன்பு
என்றுமே தேய்வதில்லை!
நினைவலைகள்
என் மனக்கடலில்
என்றுமே ஓய்வதில்லை!
1 comment:
Very very nice...siva
Post a Comment