விடியலை நோக்கி...
இதுவும்
இயற்கையின் ஒரு
சுயநலக் கொடுமைதான்.
ஒரு
ஆண்மகனை,
தன் கணவனை
ஒரு
கண்ணியத் தாய் சுமக்கிறாள்.
ஏதுமறியாத
அரைசித்தத்தில் - அந்த
ஆண்மகன்!
விளங்காத இந்த உலகம்
ஒரு வகையில்
அவனை
விலங்கிட முடியாமல்
தவிக்கிறது.
பிறர்
வெறுப்பிலும் - சிரிப்பு!
தன் மனைவியின்
வெம்மையிலும் - சிரிப்பு!
அது ஒன்றே
இறைவன் அவனுக்கு
கொடுத்த வரம்.
இலக்கு இல்லாத
அவன் வாழ்வில்
விடியலைத் தேடியே
அவன் மனைவி!
விடியும்பொழுது ஒவ்வொன்றும்
தன் வாழ்வில் விடியாதபோது
பொறுப்புகளுடன் சேர்த்து
தன் கனவனையும்
சுமந்து கொண்டு
பயணமாகிறாள்,
விடியலை நோக்கி! - அந்த
பூக்காரத் தாய்!
No comments:
Post a Comment