தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்!
இறைவன் கொடுத்த அமுதே!
எங்கள் வழ்வின் ஆதாரமே!
தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்!
ஆனால்
இன்று வறண்டு போன
என் மக்களின் கண்களிலோ
கண்ணீர்! கண்ணீர்! கண்ணீர்!
எங்கள் வாழ்வும்
வளமற்று காணப்படுகிறது.
வறண்டு போன - இந்த
பூமியைப் போல!
விவரமறியாத வயதிலும்
விதைத்துக்கொண்டோம்
எங்கள் மனதில் - இனி
எங்கள் மக்களின் தேவை
தண்ணீரேயன்றி, கண்ணீரல்ல என்று!
No comments:
Post a Comment