உன் வரவோலைக்காக!
உடையிடையில் தெரியவில்லையடி
உந்தன் மடியிடை - என்
கடைவிழி பார்வைக்கு!
உன்னதமான உன் மென்மை
என்னை மலைக்க செய்தது!
மென்மையான உன் உள்ளம்
வன்மையாக தண்டித்தது என்னை!
கூர்மையான உனது பார்வையில்
வலிமையிழந்து போனேன் நான்!
கதிரவனின் வருகையால்
காரிருள் மறைந்தது போல - உன்
முகவொளி கண்டு - என்
பேரிருள் அகன்றது!
வெண்மையான
உன் உள்ளத்தில் இடம்பெற - நான்
என்ன தவம் செய்ய...
இலக்கியமே உருவான - என்
இலக்கியா!
உன்
இதயத்தில் இடம் தருவாயோ
இந்த நாடோடிக்கு!
கடலலை என்னைக்
கடந்து சென்றாலும்
அழியாத என் அன்பு
உன் ஒருத்திக்குதான்!
உடைவாளை
என் இதயத்தில் தாங்கி
உன் வரவோலைக்காக
காத்து நிற்கிறேன்!
1 comment:
Yeapadi pa...
Post a Comment