June 12, 2007

உன் வரவோலைக்காக!

உடையிடையில் தெரியவில்லையடி
உந்தன் மடியிடை - என்
கடைவிழி பார்வைக்கு!


உன்னதமான உன் மென்மை
என்னை மலைக்க செய்தது!


மென்மையான உன் உள்ளம்
வன்மையாக தண்டித்தது என்னை!


கூர்மையான உனது பார்வையில்
வலிமையிழந்து போனேன் நான்!


கதிரவனின் வருகையால்
காரிருள் மறைந்தது போல - உன்
முகவொளி கண்டு - என்
பேரிருள் அகன்றது!


வெண்மையான
உன் உள்ளத்தில் இடம்பெற - நான்
என்ன தவம் செய்ய...
இலக்கியமே உருவான - என்
இலக்கியா!


உன்
இதயத்தில் இடம் தருவாயோ
இந்த நாடோடிக்கு!


கடலலை என்னைக்
கடந்து சென்றாலும்
அழியாத என் அன்பு
உன் ஒருத்திக்குதான்!


உடைவாளை
என் இதயத்தில் தாங்கி
உன் வரவோலைக்காக
காத்து நிற்கிறேன்!

1 comment:

Anonymous said...

Yeapadi pa...