
என் காதலை
உதறி சென்ற உன்னை
நினைக்கும் போது
குடையிருந்தும் நனைகிறேன்
கண்ணீரால்!
காயம்பட்ட
என் இதயத்தின் பிம்பத்தில்
எதிர்ப்படும் உருவமெல்லாம்
உன் உருவமாகவே
வந்து காட்சியளிக்கிறது!
நிலத்தில் சிதறிய
தண்ணீரில் தான்
என்னைப் போல,
எத்தனை பேரின்
கண்ணீரும் கலந்திருக்குமோ!
Posted by
Murthy SEO
at
3:43 AM
0 comments:
Post a Comment