June 12, 2007

வீரத்தாய்!

வீரத்தாய்
பெற்றெடித்த மூன்று
ஆண் சிங்கங்கள்!


தாரம் மறந்து
நேரம் வர
நின்றனர்!


தேசம் காக்க
பாசம் துறந்து
போருக்கு சென்றனர்!


அங்கே
போரிலே
'மூத்தமகன் வீரமரணம்'


ஈன்ற பொழுதைக்
காட்டிலும் பெரிதுவக்கும் - அந்த
வீரத்தாய்!


அங்கே
போரிலே
'இரண்டாமவன் வீரமரனம்'


பாரிலே உண்டோ
எங்கள் குல வீரம்.
நெஞ்சுயர்த்தி நின்றாள் - அந்த
வீரத்தாய்!


அங்கே
போரிலே
'மூன்றாமவன் வீரமரணம்'


கண்ணிலே கண்ணீர்
நெஞ்சிலே உதிரம்
கொட்ட உருகினாள்.


நாட்டைக் காக்க
வேட்டைக்கு அனுப்ப
இன்னொரு மகன் இல்லையே
என்று நினைக்கும்போது!

1 comment:

Anonymous said...

No words...