வீரத்தாய்!
வீரத்தாய்
பெற்றெடித்த மூன்று
ஆண் சிங்கங்கள்!
தாரம் மறந்து
நேரம் வர
நின்றனர்!
தேசம் காக்க
பாசம் துறந்து
போருக்கு சென்றனர்!
அங்கே
போரிலே
'மூத்தமகன் வீரமரணம்'
ஈன்ற பொழுதைக்
காட்டிலும் பெரிதுவக்கும் - அந்த
வீரத்தாய்!
அங்கே
போரிலே
'இரண்டாமவன் வீரமரனம்'
பாரிலே உண்டோ
எங்கள் குல வீரம்.
நெஞ்சுயர்த்தி நின்றாள் - அந்த
வீரத்தாய்!
அங்கே
போரிலே
'மூன்றாமவன் வீரமரணம்'
கண்ணிலே கண்ணீர்
நெஞ்சிலே உதிரம்
கொட்ட உருகினாள்.
நாட்டைக் காக்க
வேட்டைக்கு அனுப்ப
இன்னொரு மகன் இல்லையே
என்று நினைக்கும்போது!
1 comment:
No words...
Post a Comment